Friday, January 10, 2014

எனது சிறுகதைத் தொகுப்பு


இந்த ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சிக்கு 'மறுபடியும் ' என்கிற எனது சிறுகதை தொகுப்பு எதிர் வெளியீடு பதிப்பகத்தின் வெளியீடாக வெளிவரவுள்ளது.

மறுபடியும் 

சிறுகதைத் தொகுப்பு

கேட்டதில் தொடங்கி, படித்ததில் தொடர்ந்து காலம் இப்போது கதைகளைப் பார்ப்பதில் தன்னைத் தொலைத்துக் கொண்டிருப்பதாய் எனக்குத் தோன்றுகிறது. படித்தல் மிக பெரிய அனுபவம். அது தவிர எழுத்துக்கென்று ஒரு பிரத்யேகத் தன்மையும் இருக்கிறது. திரைமொழியில்கூட இந்த மொழியைச் சொல்லிவிட முடியாது. மற்றும் ஒவ்வொருவரின் எழுத்திலும் உணரக்கூடியதான ஒரு ரிதம் ஒளிந்து கொண்டிருக்கிறது. எல்லோர்க்குமே குழப்பமில்லாமல் ரசிக்கும்படியான மண் வாசனையுடன் கூடிய அந்த ரிதம் கனகராஜனின் கதைகளில் உணர முடிகிறது.

- முன்னுரையில் சரசுராம் ...

சென்னை புத்தக கண்காட்சி:
ஜனவரி 10 முதல் 22 வரை
எதிர் வெளியீடு
அரங்கு எண் : 80, 81